BAN vs PAK, 2nd T20I: ஸமான், ரிஸ்வான் அதிரடியில் தொடரை வென்றது பாகிஸ்தான்!

Updated: Sat, Nov 20 2021 17:02 IST
BAN vs PAK 2nd T20I: Pakistan beat Bangladesh by 8 wickets and seal the series by 2-0 (Image Source: Google)

வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருபினும் நடுவரிசையில் இறங்கிய நஜ்முல் ஹொசைன் - அஃபிஃபி ஹொசைன் ஆகியோர் மட்டும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃபிரிடி, முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அதன்பின் எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - முகமது ரிஸ்வான் இருவரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஸ்மான் அரைசதம் அடிக்க, மறுமுனையிலிருந்து ரிஸ்வான் 39 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இருப்பினும் பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமல் இருந்த ஃபகர் ஸமான் 57 ரன்களைச் சேர்த்தார். 

Also Read: T20 World Cup 2021

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை