நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெrற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பல்லகலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு முகமது நைம் மற்றும் தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் அகமது ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 16 ரன்கள் எடுத்திருந்த முகமது நைம், தனஞ்செயா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த நஹ்முல் ஹொசைன் - ஷாகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்தனர். 

Advertisement

பின் ஷாகிப் அல் ஹசன் 5 ரன்களிலும், தாஹித் ஹிரிடோய் 20 ரன்களுக்கும், முஷ்பிக்கூர் ரஹிம் 13 ரன்களுக்கும், மெஹிதி ஹசன் மிராஸ் 5 ரன்களிலும், மஹெதி ஹசன் 6 ரன்களும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அரைசதம் கடந்து சதத்தை நெருங்கிய நஹ்முல் ஹொசைன் சாண்டோ 90 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேச அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மதீஷா பதிரனா 4 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்‌ஷனா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா - திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கருணரத்னே ஒரு ரன்னிலும், அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 5  ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான பதும் நிஷங்காவும் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அதன்பின் இணைந்த சதீரா சமரவிக்ரமா - சரித் அசலங்கா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த சமரவிக்ரமா 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வாவும் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். அவருக்கு துணையாக விளையாடிய கேப்டன் தசுன் ஷனகாவும் 14 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இலங்கை அணி 39 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News