இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த உலகக்கோப்பைக்காக அனைத்து நிகளுமே தங்களது தயாரிப்புகளை தொடங்கிவிட்டன. ஒவ்வொரு நாடும் உலக கோப்பையில் விளையாடும் தங்களது 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி காலக்கெடு விதித்திருக்கிறது. மேலும் அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றங்களை செய்வதற்குரிய கடைசி தேதி செப்டம்பர் 27 ஆகும் . இதனால் உலக கோப்பையில் விளையாடும் நாடுகள் தங்களது அணி தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. 

Advertisement

இதனை கருத்தில் கொண்டு தான் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டி தொடரை பரிசோதனை களமாக பயன்படுத்தியது. கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் உடற்தகுதி குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் ஒருவேளை அவர்கள் இருவரும் காயம் காரணமாக அணியில் இடம் பெற முடியாவிட்டால் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை தயார்படுத்துவதற்கு இந்தியா பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது கேஎல் ராகுல்,ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் கூடிய விரைவிலேயே உடர் தகுதியை பெற்று விடுவார்கள் என்று செய்திகள் வெளியாகி இந்திய ரசிகர்களை ஆறுதல் படுத்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஓய்வை திரும்பப் பெறுவதற்கு தயாராக இருப்பதாகவும் உலகக் கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாட அவர் முடிவு செய்துள்ளதாகவும் அந்நாட்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது . இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து வரும் பென் ஸ்டோக்ஸ், கடந்த வருடம் ஒரு நாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். மேலும் ஓய்வை திரும்பப்பெறும் எண்ணம் இல்லை என்றும் கூறியிருந்தார் . 

இந்நிலையில் தற்போது நடைபெற இருக்கும் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியில் இவர் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன . இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டும் டி20 அணியின் கேப்டனான ஜோஸ் பட்லர் கேட்டுக் கொண்டால் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது . கடந்த வருடம் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்திருந்தபோது தனது ஒரு நாள் போட்டிகளுக்கான ஓய்வை அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது . உலகக்கோப்பை நடைபெறும் நேரத்தில் முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதாக முன்னர் தெரிவித்து இருந்தார்.

ஆனால் தற்போது அவர் உலகக் கோப்பை போட்டியில் ஆட விருப்பம் தெரிவித்திருப்பதாக டெலிகிராப் ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதற்காக 2024 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிப்பதற்கும் அவர் தயாராக இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் நடைபெறும் காலகட்டத்தில் கிடைக்கும் ஓய்வு நேரத்தை தனது மூட்டு அறுவை சிகிச்சைக்கு செலவிட இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உலகக் கோப்பை போட்டியில் அவர் பங்கேற்றாலும் பந்து வீசாமல் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே மிடில் ஆர்டரில் விளையாடுவார் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு உலக கோப்பையை பெற்றுத் தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார் . மேலும் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக அரை சதம் எடுத்து இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

பென் ஸ்டோக்ஸ் ஓய்வில் இருந்து திரும்ப வந்தால் இங்கிலாந்து அணியின் பலம் அதிகரிக்கும் . மேலும் அவர்கள் உலகக்கோப்பையை கைப்பற்றுவதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் . அதே நேரம் அவர் உலகக் கோப்பையில் பங்கேற்று ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் புறக்கணித்தால் அது சிஎஸ்கே அணிக்கு பாதகமாக அமையும் . மேலும் காயத்திலிருந்து குணமடைந்து வரும் இங்கிலாந்து அணியின் அதிவேகப் பந்துவீச்சாளரான ஜோப்ரா ஆர்சரும் உலகக் கோப்பை காண அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற முன்னணி வீரர்களின் வருகையால் இங்கிலாந்து அணி உலக கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News