நிதிஷ் ரெட்டியை முன்வரிசையில் களமிறக்க வேண்டும் - மைக்கேல் கிளார்க்!

Updated: Thu, Jan 02 2025 08:42 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் அஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் திவீரமாக தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சிட்னி டெஸ்டில், இந்தியாவின் வளர்ந்து வரும் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் மூன்கூட்டியே களமிறங்க வாய்ப்பளிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யும் இந்த இளம் வீரர் நிதீஷ் ரெட்டி ஒரு மேதை. அவர் நிச்சயமாக ஆறு இல்லை என்றால் ஏழாவது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்தியா அணியின் முன்னணி ரன் குவிப்பவராக உள்ளார். தற்போது 21 வயது மட்டுமே ஆகும் அவரை இந்திய அணி இத்தொடர் முழுவதும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளார்.

அவர் ஆறாவது இடத்தில் பேட் செய்ய தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். எனவே, கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் 6ஆம் இடத்தில் களமிறங்கினால் அது இந்திய அணி வெல்வத்ற்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் அவர் தனது பேட்டிங்கின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். அவர் எந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரையும் கண்டு பயந்ததில்லை. பொறுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் பொறுமையாக இருந்திருக்கிறார். அவர் மிகச் சிறப்பாக வாலுடன் பேட்டிங் செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, தனூஷ் கோட்டியான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::