2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தப் பிறகு, இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி ரவி சாஸ்திரி, தற்போது கிரிக்கெட் வர்ணனை செய்து வருகிறார். ஐபிஎல் 16ஆவது சீசனுக்கும் இவர் வர்ணனை செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இவர், தீபக் சஹாரை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். காரணம், தீபக் சஹாரின் பிட்னஸ்தான்.

Advertisement

தீபக் சஹார் கடந்த சில வருடங்களாகவே காயம் காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். இதனால், கடந்த டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் தீபக் சஹாரால் இடம்பிடிக்க முடியவில்லை. பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து குணமடைந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் தொடரில் களமிறங்கினார். அப்போதும் காயம் ஏற்பட்டதால், மீண்டும் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

Advertisement

இதையடுத்து, தற்போது ஐபிஎல் 16ஆவது சீசனில் தீபக் சஹார் கம்பேக் கொடுத்துள்ளார். இருப்பினும், ஒருசில போட்டிகளில் விளையாடிப் பிறகு தற்போது அதே இடத்தில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும் பெங்களூர் சென்று சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ரவி சாஸ்திரி, தீபக் சஹாரை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், “பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில், சில வீரர்கள் நிரந்தமாக தங்க முடிவு செய்துவிட்டார்கள். கூடிய விரைவில் அவர்கள் அங்கு குடியேறுவார்கள் எனக் கருதுகிறேன். இது நல்லதுக்கு அல்ல.

தீபக் சஹார் ஒன்றும் அதிக போட்டிகளில் விளையாடிவிட்டு காயம் காரணமாக விலகுவது கிடையாது. அவர் தொடர்ந்து நான்கு போட்டிகளில் கூட விளையாடுவது கிடையாது. மறுபடியும் மறுபடியும் காயம் காரணமாக விலகுகிறார். ஏன், தொடர்ந்து பெங்களூரிலேயே தங்கியிருந்து முழு சிகிச்சை எடுத்துக் கொண்டால் என்ன? மீண்டும் 4 போட்டிகளுக்கு பிறகு விளையாடி மீண்டும் காயம் காரணமாக அவதிப்பட்டால், அவர் சிஎஸ்கேவுக்கு தேவையே கிடையாது” என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News