ஒரு முழு குழுவாக எங்களுக்கு முடிவுகள் கிடைக்கவில்லை - ஜோஸ் பட்லர்!

Updated: Sun, Mar 02 2025 09:40 IST
Image Source: Google

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி இம்முறை பேட்டிங்கில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியில் ஜோ ரூட் 37 ரன்களையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 25 ரன்காலையும், பென் டக்கெட் 24 ரன்களையும், ஜோஸ் பட்லர் 21 ரன்கலையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 179 ரன்களில் ஆல் அவுட்டானது.

ஆதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியிலும் ஸ்டப்ஸ், ரிக்கெல்டன் ஆகியோர் சோபிக்க தவறினர். அதன்பின் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் 64 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் வேன்டர் டுசென் 72 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 29.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறியது.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், “இது உண்மையிலேயே ஏமாற்றமளிக்கும் செயல்திறன், இன்று நாங்கள் எங்கள் இலக்கை அடையவில்லை, மிகவும் ஏமாற்றமளிக்கிறது. மேலும் இது பேட்டிங் செய்ய ஏதுவான ஒரு மைதானம். இதில் ஆரம்பத்திலேயே நாங்கள் விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் டக்கெட் எங்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தார், ஆனால் அதை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

உண்மையைச் சொல்லப் போனால், ஒரு முழு குழுவாக, எங்களுக்கு முடிவுகள் கிடைக்கவில்லை, அது எங்களிடமிருந்து நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. எங்கள் வீரர்களிடம் திறமை உள்ளது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதனால் எங்களால் ஒரு சிறந்த அணியை ஒன்றிணைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அதற்காக வீரர்களும் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டியது அவசியம். 

Also Read: Funding To Save Test Cricket

நான் ஒரு உலகக்கோப்பை வென்ற கேப்டன் என்பது பெருமையாக உள்ளது. மேலும் அதுதான் எனது கேப்டன் பதவிக்காலத்தில் என்னுடைய சிறந்த நாளாகவும் இருந்தது. ஜோ ரூட் எனக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்துள்ளார். ஏனெனில் அவரும் தனது கேப்டன் பதவியை துறந்த பிறகு, அற்புதமாக விளையாடியுள்ளார். அதனால் நானும் அவரைப் பின்பற்றுவதுடன், அவரைப் போல சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை