மற்ற அணிகளைப் போல் ஆஃப்கானிஸ்தானும் ஆபத்தான அணி தான் - ஸ்டீவ் ஸ்மித்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற இருந்த ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி தொடர் மழை காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் முழுவாதுமாக ரத்து செய்யப்பட்டது.
இதன்மூலம் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு தலா ஒரு புள்ளியும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இரு அணிகளுக்கும் அரையிறுதிச்சுற்று வாய்ப்பானது கடினமாகியுள்ளது. ஏனெனில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா 2 போட்டிகளில் 3 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன. அதனால் இனி வரும் போட்டிகளில் அந்த அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலிய அணி தங்களுடைய கடைசி போட்டியில் ஆஃப்கானிஸ்தானையும், தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தையும் எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இந்த இரு அணிகளும் வாழ்வா சாவா போட்டிகளில் விளையாடவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இந்நியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்று தாங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இரண்டு நாட்களுக்கு முன்பு வானிலை செயலியைப் பார்த்தபோது இங்கு சில நாள்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது போட்டியை நடத்த விடாமல் செய்யும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது எங்கள் அணிக்கு சிறந்தது அல்ல என்றாலும், இதை எங்களால் ஏதும் செய்ய முடியாது. இப்போது சமன்பாடு மிகளவும் எளிதாகிவிட்டது என்று நினைக்கிறேன். நாங்கள் அடுத்த போட்டியில் ஆஃப்கானை எதிர்கொள்கிறோம்.
அப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் என்று நம்புகிறேன். இந்த தொடரில் விளையாடும் மற்ற அணிகளைப் போலவே, ஆஃப்கானிஸ்தன் அணியும் தங்கள் நாளில் ஆபத்தான அணி. இந்த போட்டியின் அழகு அதுதான் என்று நான் நினைக்கிறேன். எட்டு சிறந்த அணிகள் அதை எதிர்த்து வருவதால், யார் வேண்டுமானாலும் ஒரு நல்ல நாளை அனுபவிக்க முடியும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket