நேர்மையாக உரையாடிய பிறகும் கிரிக்கெட் வாரியத்தின் கதவுகள் திறக்கப்படவில்லை - வார்னர்!

Updated: Sun, Aug 21 2022 20:37 IST
Image Source: Google

கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தோடு சேர்த்து சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான டேவிட் பார்ட்னர் ஓர் ஆண்டு அணியில் இருந்து தடை செய்யப்பட்டதோடு கேப்டன் பதவியில் இருக்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு அவர் ஆஸ்திரேலிய அணியில் இணையவும் தாமதம் ஏற்பட்டது.

அதோடு ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்தால் நடத்தப்படும் பிக்பாஷ் லீக் போட்டியிலும் கேப்டனாக அவர் தொடரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அதோடு அவர் கேப்டனாக செயல்பட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் பிபிஎல் சீசனுக்காக சிட்னி தண்டர்ஸ் நிர்வாகத்துடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் டேவிட் வார்னர் கையெழுத்திட்டுள்ளார். இதன் காரணமாக வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் இந்த தொடரில் அவர் சிட்னி அணிக்கு கேப்டனாக செயல்பட வேண்டும் என்ற ஆதரவு வலுத்து வருகிறது.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சர்ச்சை சம்பவம் குறித்து நான் நேர்மையாக உரையாடிய பிறகும் கிரிக்கெட் வாரியத்தின் கதவுகள் கடைசிவரை திறக்கப்படவில்லை என்று டேவிட் வார்னர் தெரிவித்தார். 

இதுகுறித்து பேசிய அவர், “நான் கேப்டனாக இருக்க தடை விதிக்கப்பட்டாலும் அணிக்குள் இன்னமும் கேப்டனாக தான் இருக்கிறேன். கேப்டன் என்பது ஒரு பெயர் மட்டுமே என்னிடம் இல்லை. அதை தவிர மற்றபடி அணிக்குள் நான் கேப்டன் தான்” என்று தெரிவித்தார். 

அதேபோன்று வார்னரை ஆதரித்து பேசிய கம்மினிஸ் கூறுகையில், “பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஸ்மித்ற்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே கேப்டன் பதவியில் இருக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கேப்டனாகவும் அணியை வழி நடத்தினார். அதே வேளையில் வார்னருக்கும் ஏன் மன்னிப்பு கொடுக்கக் கூடாது” என  ஆதரவாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை