இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் தீபக் சஹார். இவரை கடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர் என்ற பெருமையை தீபக்சாகர் கடந்த மெகா ஏலத்தில் படைத்தார். ஆனால் 14 கோடி ரூபாய் கொடுத்தும் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கடந்த சீசனில் வெளியேறினார்.

Advertisement

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்த தீபக் சஹார் கடந்த அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்கா தொடரின் போது மீண்டும் காயம் காரணமாக வெளியேறினார். இது ரசிகர்களை விரக்தி அடையச் செய்தது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தீபக் சஹார், “தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறேன். கடந்த ஒன்றரை மாதமாக என் உடல் தகுதிக்காக கடுமையாக உழைத்தேன்.

Advertisement

ரிஷிகேஷ் சென்று யோகா உள்ளிட்ட பயிற்சியை மேற்கொண்டேன். தியானம் செய்ததோடு கிரிக்கெட் பயிற்சியின் அவ்வப்போது செய்தேன். நமது அடிப்படையை கவனிக்க எல்லோருக்கும் இது போன்ற நேரம் தேவை. ஆண்டு முழுவதும் பல கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவதால் நான் கிரிக்கெட்டில் இருந்து இந்த காலத்தில் விலகி என் உடல் அளவிலும் மனதளவிலும் மேன்மை பெற கவனம் செலுத்தினேன்.

கடந்த ஆண்டு எனக்கு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. எனக்கு அடுத்தடுத்து இரண்டு பெரிய காயங்கள் ஏற்பட்டது. இதிலிருந்து குணமடைவது அதிக காலம் தேவைப்படும். ஒரு வேகப்பந்துவீச்சாளர் பந்து வீசும் போது அவரது எடையை ஏழு மடங்கு அதிகமாக தாங்க வேண்டும். உதாரணத்திற்கு நான் 80 கிலோ இருக்கிறேன் என்றால் நான் பந்து வீசும் போது என்னுடைய முதுகு 700 கிலோ எடையை தாங்க வேண்டும். இதனால்தான் எனக்கு உடல் தகுதியை மீண்டும் எட்ட அதிக காலம் தேவைப்படுகிறது.

இதுவே நான் ஒரு சுழற் பந்து வீச்சாளராகவோ இல்லை பேட்ஸ்மேன் ஆகவோ மட்டும் இருந்திருந்தால் முன்பே உடல் தகுதியை எட்டி கிரிக்கெட் விளையாடி இருப்பேன். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான தோல்வியை நாங்கள் சந்தித்தோம். ஒரு வீரர்களுக்கு அதிக பணம் செலுத்தி வாங்கி அவரை சுற்றி அணியை கட்டமைக்க நினைக்கும் போது அவர் இல்லை என்றால் நிச்சயம் அது பின்னடைவை தான் சந்திக்கும். இம்முறை ஐபிஎல் மூலம் நான் கம்பேக் கொடுக்க முயற்சி செய்வேன். இது எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீசன் ஆகும்” என்று தீபக் சஹார் தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News