ஐபிஎல் 2022: அணிகள் தக்கவைக்ககும் வீரர்களின் விவரம்!

Updated: Tue, Nov 30 2021 11:58 IST
Dhoni, Kohli, Rohit, Bumrah retained by IPL franchises for 2022 (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14ஆவது ஐபிஎல் சீசனுக்கு பிறகு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 15ஆவது ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இரண்டு அணிகள் சேர்ந்து மொத்தம் 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அண்மையில் நடைபெற்று முடிந்த புதிய அணிகளுக்கான ஏலத்தில் புதிய இரண்டு அணிகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது.

அதன்படி அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாக வைத்து இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும் மீதமுள்ள வீரர்களை ஏலத்தில் விடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி இன்று இரவு 12 மணியுடன் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் அணி உரிமைதாரர்கள் அளிக்க வேண்டும். இதில் லக்னோ அணி கே.எல்.ராகுலுக்கு ரூ.20 கோடி அளித்து ஒப்பந்திக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஐபிஎல் அணிகள் எந்தெந்தெ வீரர்களைத் தக்கவைக்கவுள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அணிகளும் தக்க வைத்த வீரர்களும்: 

  • சென்னை சூப்பர் கிங்ஸ்: ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்.
  • சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - கேன் வில்லியம்சன்.
  • மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.
  • ஆர்சிபி: விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல்
  • டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பந்த், அக்ஸர் படேல், பிரித்வி ஷா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே.
  • ராஜஸ்தான் ராயல்ஸ்- சஞ்சு சாம்சன்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை