19ஆவது ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் செப்டம்பர் 23ஆம் தேதி துவங்கி அக்டோபர் எட்டாம் தேதி முடிவடைய இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த போட்டிகள் கரோனா தொற்று காரணமாக இந்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது .

Advertisement

தற்போது இந்த போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசியாவைச் சேர்ந்த அனைத்து நாடுகளும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. கடந்த ஆசிய போட்டிகளிலும் இடம் பெற்ற கிரிக்கெட் இந்த வருட ஆசிய போட்டிகளிலும் இடம் பெற்று இருக்கிறது. கடந்த முறை இலங்கை அணி தங்கப் பதக்கத்தை வென்றது . 

Advertisement

இந்த முறை பிசிசிஐ முதல் முதலாக ஆசிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கு கிரிக்கெட் அணியை அனுப்ப தயாராக இருக்கிறது . இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தேர்வு செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான ருத்ராஜ் கெயிக்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

இந்த அணியில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா போன்ற வருங்கால நம்பிக்கையை நட்சத்திரங்களும் இடம் பெற்று இருக்கின்றனர் . ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது பற்றி தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார் ருத்ராஜ் கெயிக்வாட். இது தொடர்பாக பிசிசிஐ டிவியில் பேசியிருக்கும் அவர் தன்னை கேப்டனாக தேர்வு செய்த தேர்வாளர்கள் மற்றும் பிசிசிஐக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் தனது நாட்டிற்காக ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கு பெறுவது நிச்சயம் பெருமையான ஒரு விஷயம். மேலும் நமது நாட்டிற்காக பதக்கத்தை வெல்வது சிறுவயதிலிருந்தே இருக்கக் கூடிய ஒரு கனவு. நிறைய தடகள வீரர்கள் நம் தேசத்திற்காக பதக்கங்களை வேண்டி இருப்பதை நாம் டிவியில் பார்த்திருக்கிறோம். இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வென்று பதக்கம் பெறும் மேடையில் நின்று தேசிய கீதத்தை பாடுவது தான் எனது தற்போதைய கனவு.

பிசிசிஐ, நிர்வாக குழு மற்றும் தேர்வாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வீரராக இந்திய அணிக்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதே பெருமை அதிலும் என்னை இந்திய அணியை வழிநடத்தும் கேப்டன் ஆக தேர்வு செய்து இருப்பதற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News