தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.  ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

Advertisement

இதையடுத்து இன்னிங்ஸை தொடங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் - மேத்யூ ப்ரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரீட்ஸ்கி 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 23 ரன்கள் எடுத்திருந்த குயின்டன் டி காக்கும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ஜேஜே ஸ்மட்ஸ் - பனுகா ராஜபக்சா இணை ஓரளவு தாக்குப்பிடித்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

Advertisement

இதில் ஜேஜே ஸ்மட்ஸ் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பனுகா ராஜபக்சா 35 ரன்களி ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் - வியான் முல்டர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதிலும் இப்போட்டியில் சிக்சர்களாக விளாசிய ஹென்ரிச் கிளாசென் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

அதன்பின் தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசி மிரட்டி வந்த ஹென்ரிச் கிளாசென் 3 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 74 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய டுவைன் பிரிட்டோரியஸ் 3 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அதேசயம் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வியான் முல்டர் 23 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என தனது அரைசதத்தைப் பதிவுசெய்து சத்தினார். 

இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களைக் குவித்துள்ளது. சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் நந்த்ரே பர்கர் மற்றும் டக் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News