ஓவலில் சாதனை படைத்த இந்தியா - பிரதமர் வாழ்த்து!

Updated: Tue, Sep 07 2021 11:13 IST
ENG vs IND, 4th Test: PM Modi, Ganguly, Tendulkar Take To Twitter To Hail Team India (Image Source: Google)

இந்தியா- இங்கிலாந்து இடையியான 4ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. மேலும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்திய அணி பெற்ற முதல் வெற்றியாகும். 

இதையடுத்து சாதனை படைத்த இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். 

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், “தடுப்பூசி செலுத்தும் பணியிலும் மற்றும் கிரிக்கெட் மைதானத்திலும் மீண்டும் மிகச்சிறந்த நாள். எப்போதும் போல இந்தியா வெற்றி பெற்றுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை