நியூசிலாந்து - இங்கிலாந்து அணிக்களுக்கு இடையேயன 2ஆவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டிக்கு நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேனியல் லாரன்ஸ், ரோரி பர்ன்ஸ் தலா 81 ரன்களை எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்களையும், மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டேவன் கான்வே, வில் யங், ராஸ் டெய்லர் ஆகியோர் அரைசதமடித்து வலிமான நிலைக்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 388 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை நிறைவு செய்தது. இதில் வில் யங் அதிகபட்சமாக 82 ரன்களையும், டேவன் கான்வே, ராஸ் டெய்லர் தலா 80 ரன்களையும் சேர்த்தனர். 

அதனைத் தொடர்ந்து 85 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்லி, ஸாக் கிரௌலி, ஜோ ரூட், ஒல்லி போப், டேனியல் லாரன்ஸ் என அனைத்து முன்னணி வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து முன்னிலைப் பெற்றது. 

பின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே சேர்த்து, 37 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி, நெய்ல் வாக்னர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். 

Advertisement

இங்கிலாந்து அணி தரப்பில் ஒல்லி ஸ்டோன் 29 ரன்களுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன் ஏதுமின்றியும் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர். இதனால் இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News