கவுண்டி தொடரிலிருந்தும் விலகிய ஜேசன் ராய்!

Updated: Wed, Mar 02 2022 10:44 IST
England batter Jason Roy takes break from cricket, to be unavailable for Surrey (Image Source: Google)

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராயை ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியிருந்தது. இந்த நிலையில் 31 வயதான ஜேசன் ராய் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்.-ல் இருந்து திடீரென விலகியுள்ளார். 

தொடர் பயோ பபுள் சூழலில் நீண்ட நாட்கள் இருப்பது சோர்வை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அவர் குஜராத் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதே காரணங்களுக்காக அவர் கவுண்டி கிரிக்கெட் தொடரிலிருந்தும் விலகியுள்ளார். கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடி வரும் ஜேசன் ராய் நடப்பாண்டு லீக் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இரண்டு வருடங்களுக்கும் மேலாக கோவிட் கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்ந்த பிறகு, இப்போது என் மனைவி மற்றும் சிறு குழந்தைகளுடன் இருக்க சரியான நேரம் என்று உணர்கிறேன். சர்ரே பயிற்சி ஊழியர்களின் பொறுமைக்காகவும், சர்ரே உறுப்பினர்கள் புரிந்துகொண்டதற்காகவும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் விளையாட்டில் இருந்து விலகி இருக்கும் போது அணியை நெருக்கமாகப் பின்தொடர்ந்து, நடுநிலைக்குத் திரும்பும்போது என்னால் சிறப்பாக இருக்க கடினமாக உழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை