Surrey cricket
கவுண்டி கிரிக்கெட்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன்!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடிய ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களால் என்றும் மறக்காது. தனியாளாக ஆட்டத்தை மொத்தமாக குஜராத் அணியின் பக்கம் திருப்பினார் சாய் சுதர்சன். அங்கு தொடங்கிய சாய் சுதர்சனின் விஸ்வரூபம், டிஎன்பிஎல், இந்தியா ஏ அணிகளுக்காகவும் தொடர்ந்தது. இதனால் நீண்ட நாட்களுக்கு பின் இந்திய டெஸ்ட் அணிக்கு தமிழ்நாட்டில் இருந்து ஒரு சிறந்த பேட்ஸ்மேன் இடம்பெற போவதாக ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இந்திய ஜெர்சியை அணிவதற்கு முன்பாகவே சாய் சுதர்சன் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் தொடரில் சர்ரே அணியின் ஜெர்சியை அணிந்திருக்கிறார். கடந்த மாதம் கவுண்டி கிரிக்கெட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் விளையாடுவதற்காக சர்ரே அணி தமிழக வீரர் சாய் சுதர்சனை ஒப்பந்தம் செய்தது. இதற்கு பின் தமிழ்நாடு வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பதாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்தியாவில் கவுண்டி அணிகளுடன் நல்ல தொடர்பை அஸ்வின் கொண்டிருக்கிறார்.