இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று டவுன்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து வந்த நிலையில், மழை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் மழையின் காரணமாக இப்போட்டியானது 21 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைப்பட்டு மீண்டும் தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் கியானா ஜோசப் 34 ரன்களையும், ஆலியா அலீன் 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக 21 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 016 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. 

Advertisement

இங்கிலாந்து மகளிர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாரா க்ளென் 3 விக்கெட்டுகளையும், எமிலி அர்லோட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியில் இந்த ஆட்டத்தில் சோஃபியா டங்க்லி மற்றும் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் டங்க்லி 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

அதேசமயம் மறுபக்கம் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நாட் ஸ்கைவர் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 ரன்களையும், அவருடன் இணைந்து அலிஸ் கேப்ஸி 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 10.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News