ENG vs IND, 5th Test: அரைசதம் கடந்த ஜடேஜா; 361 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

Updated: Mon, Jul 04 2022 17:26 IST
England Dominate In First Session On Day 4; India Score 229/7 At Lunch (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரிஷப் பந்த் (146) மற்றும் ரவீந்திர ஜடேஜா (104) ஆகிய இருவரின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவின் அபாரமான சதத்தால்(106) முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது.

132 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களைச் சேர்த்திருந்தது. 

இதையடுத்து இந்திய அணி தரப்பில் புஜாரா 50 ரன்களுடனும், ரிஷப் பந்த் 30 ரன்களுடனும் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் புஜாரா 66 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த் அரைசதம் கடந்தார். முதல் இன்னிங்ஸில் சதமடித்து 146 ரன்களை குவித்த ரிஷப் பண்ட் 2வது இன்னிங்ஸில் அரைசதம் கடந்து, 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜடேஜா 17 ரன்களுடனும், முகமது ஷமி 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை