இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றியைப் பெற்றுள்ளது.

Advertisement

இப்போட்டியின் கடைசி இன்னிங்ஸில் 297 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 94/4 எனத் திணறிக் கொண்டிருந்தபோது ஜானி பேர்ஸ்டோவ் 92 பந்துகளில் 136 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 70 பந்துகளில் 75 ரன்களும் குவித்து, அணிக்கு 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தனர்.

Advertisement

இருப்பினும், இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக, குறிப்பாக இரண்டு ஓவர்களை அதிகமாக எடுத்துக் கொண்டதாக கூற ஐசிசி, இங்கிலாந்து அணியின் இரண்டு புள்ளிகளை குறைத்துள்ளது. விதிமுறைப்படி ஒரு ஓவர் தாமதமாக பந்துவீச்சில் ஒரு புள்ளி குறைக்கப்படும். மேலும் இங்கிலாந்து வீரர்களின் 40 சதவீத போட்டியை அபராதமாகப் பெறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, புதிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வங்கதேச அணி 4 தொடர்களில் ஒரு வெற்றியைப் பெற்று, 16.67 சதவீதத்துடன் 9ஆவது இடத்தில் நீடித்து வருகிறது.

இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றாலும் 23.81 சதவீதத்துடன் 8ஆவது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. நியூசிலாந்து (29.17%), வெஸ்ட் இண்டீஸ் (35.71%), பாகிஸ்தான் (52.38%) அணிகள் 7,6,5 ஆகிய இடங்களில் நீடித்து வருகின்றன. இலங்கை அணி (55.56%) நான்காவது இடத்தில் நீடித்து வருகிறது.

ஆஸ்திரேலிய அணி (75.00%), தென் ஆப்பிரிக்கா (71.43) அணிகள் அசைக்க முடியாத அளவுக்கு முதல் இடங்களில் நீடித்து வருகின்றன. அடுத்து இந்திய அணி (58.33) மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த மூன்று அணிகளில் இரண்டுதான் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News