இங்கிலாந்து - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் - சோஃபி டிவைன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை நியூசிலாந்து மகளிர் அணி சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சொஃபி டிவை 35 ரன்களையும், சூஸி பேட்ஸ் 34 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து மகளிர் அணிக்கு டேனியல் வையட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் 35 ரன்கள் எடுத்திய வையட் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து டாமி பியூமண்ட், நட்டாலி ஸ்கைவர் ஆகியோர் சொற்ப ரகளில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஹீத்தர் நைட் - எலன் ஜோன்ஸ் இணை சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதன் மூலம் 19.5 ஓவர்களில் இங்கிலாந்து மகளிர் அணி இலக்கை எட்டி, நியூசிலாந்தை வீழ்த்தியதுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ஹீத்தர் நைட் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.