ENGW vs INDW, 2nd ODI: இங்கிலாந்திற்கு 140 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!

Updated: Sat, Jul 19 2025 21:43 IST
Image Source: Google

ENGW vs INDW, 2nd ODI: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வானது தாமதமானது. 

அதன்பின் இப்போட்டியானது 29 ஓவர்களாக குறைப்பட்ட தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ராவல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரதிகா ராவல் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் 16 ரன்னிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 7 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 ரன்னிலும், ரிச்சா கோஷ் 2 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் 42 ரன்களுடன் நடையைக் கட்டினார். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் களமிறங்கிய தீப்தி சர்மா ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய அருந்ததி ரெட்டி 14 ரன்களிலும், ஸ்நே ரானா 6 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த தீப்தி சர்மா 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 29 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், எம் ஆர்லோட், லின்ஸி ஸ்மித் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை