ஐபிஎல்யின் 15ஆவது சீசனில் நேற்று நடந்த பதினோராவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா, பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

Advertisement

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் மயங்க் அகர்வால், 4 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பானுகா ராஜபக்சவும் தோனியின் அதிவேக கீப்பிங் திறமையால் ரன் அவுட் ஆக, பிறகு சேர்ந்த ஷிகர் தவான், லிவிங்ஸ்டன் ஜோடி பொறுப்பாக விளையாடி 95 ரன்களை சேர்த்தது. இதையடுத்து வந்த வீரர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க, பஞ்சாப் கிங்ஸ் 20 ஒவர்களின் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு, 180 ரன்களை எடுத்தது.

Advertisement

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் ஆரம்பம் முதலே பேரிடராக அமைந்தது. தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ், பவர்பிளேவிலேயே 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. ருதுராஜ் (1), உத்தப்பா (13),மொயின் (0), அம்பத்தி ராயுடு (13) ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஜடேஜாவும் டக் அவுட் ஆனார். 

அடுத்து, சிவம் துபே அதிகபட்சமாக 30 பந்துகளில் 3 சிக்ஸ்ஸர்கள், 6 பவுண்டரிகள் என 57 ரன்களை எடுத்தார். தோனி 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சென்னை ரசிகர்களின் நம்பிக்கையும் போனது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ஓவர்களின் முடிவிலேயே, 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதற்கு பின் பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால், "நான் லிவிங்ஸ்டோனுக்கு போட்டிக்கு முன்னாள் எந்த அறிவுரையும் சொல்லவில்லை. அவர் பேட்டிங் செய்யும்போது அனைவரும் செய்வதறியாது இருக்கிறார்கள். அவர் சில பந்துகளை அடிக்கும் விதம் பிரமாதமாக இருந்தது.

நாங்கள் புதிய பந்தில் விக்கெட்டுகளை எடுத்தால், அவர்களுக்கு 180 ரன்களைத் துரத்துவது எளிதாக இருக்காது என்பது எங்களுக்கு தெரியும். அதைத்தான் நாங்கள் செய்தோம். அந்த முயற்சியை சரியாக செய்து, அதில் வெற்றியடைந்ததால் தான், இந்த போட்டி எங்களுக்கு சாதகமாக அமைந்தது.

Advertisement

வைபவ் சில வருடங்களுக்கு முன் எங்களுடன் இருந்தார். அவரின் திறமையை நாங்கள் நன்கு அறிவோம். அவர் வித்தியாசமானவர், அவர் இளமையாகவும் இருக்கிறார். ஜிதேஷ், மும்பை இந்தியன்ஸில் இருந்த போது அனில் கும்ப்ளே அவரை பார்த்து, 'இவரை ஏலத்தில் வாங்கியாக வேண்டும் என்று தெரிவித்தார். கும்ளேவில் தேர்வு சரியாக அமைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News