இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்த புஜாரா என்று பெயர் வாங்கியவர் ஹனுமா விஹாரி. டெஸ்ட் போட்டியில் 161 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்களை மட்டுமே சேர்த்து அணியை காப்பாற்றியவர். அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்வதற்கு மிகமுக்கிய காரணமே இவர் தான் இதுவரை சர்வதேச டெஸ்டில் 29 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ஹனுமா விகாரி, 839 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஐந்து அரை சதங்களும், ஒரு சதமும் அடங்கும்.

Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் எதிர்காலம் என்று கருதப்பட்ட ஹனுமா விகாரி திடீரென்று அணியிலிருந்து காரணமே இல்லாமல் நீக்கப்பட்டார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹனுமா விகாரி, “ஒரு முறை நீங்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டால் மீண்டும் அணிக்குள் வருவது மிகவும் கடினம். ஏனென்றால் உங்களுடைய மனநலம் நிச்சயம் பாதிக்கப்படும். கடந்த சீசன் முழுவதும் நான் அப்படிதான் பாதிக்கப்பட்டேன்.

Advertisement

ஆனால் இம்முறை அனைத்தையும் ஓரம் கட்டி விட்டு என்னுடைய பேட்டிங்கில் மட்டும் நான் கவனம் செலுத்த நினைத்தேன். என்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டேன். கடந்த 12 ஆண்டுகளாக நான் என்ன செய்தேனோ அதை தான் மீண்டும் செய்து கொண்டிருக்கின்றேன். எனக்கு எந்த அணியில் வாய்ப்பு கிடைக்கிறதோ அதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்று தர வேண்டும் என்று நினைக்கிறேன்.

எனக்கு இந்திய அணியில் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் நான் சிறப்பாக விளையாடியதாகவே எண்ணுகிறேன். நான் சிறப்பாக செயல்பட்டும் அது அணிக்கு போதவில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் மீண்டும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் என்னையே நான் முன்னேற்றிக்கொள்ள உழைத்து வருகின்றேன்.

ஒரு விளையாட்டு வீரராக என்னால் அதுதான் செய்ய முடியும். எனக்கு நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது. எனக்கு 29 வயது தான் ஆகிறது. இன்னும் நிறைய நேரம் இருப்பதாக நினைக்கிறேன்.ரகானே 35 வயதில் இந்திய அணிக்கு மீண்டும் வந்திருக்கிறார். அதை பார்த்து நான் எழுச்சி அடைந்தேன். என்னால் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து அணிக்காக பங்களிப்பை மேற்கொள்ள முடியும் என நினைக்கிறேன். அதற்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்கள் அடிக்க வேண்டும் என்று விளையாடி வருகின்றேன்” என கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News