வார்னர் பற்றி நல்லவிதமாக சொல்ல ஒன்று கூட இல்லை - ஃபாஃப் டூ பிளெசிஸ் தாக்கு!

Updated: Thu, Nov 17 2022 09:16 IST
Former South African skipper Faf du Plessis has made a scathing remark about David Warner. (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் ஃபாஃப் டூ பிளெசிஸ். இவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக 69 டெஸ்ட், 143 ஒருநாள், 50 டி20 போட்டிகளில் விளையாடி 16 ஆயிரத்திற்கு அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார். அதன்பின் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது லீக் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 

இந்நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் ‘ஃபாஃப் த்ரோக் ஃபையர்’ என்ற சுயசரிதை புத்தக்கத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் குறித்து பேட்டி ஒன்றில் பேசும் போது டுப்ளசிஸ் கடுமையான விமர்சனத்தை வார்னர் மீது வைத்திருக்கிறார்.

அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கிரிக்கெட் உலகிலே பெரிய சர்ச்சை ஒன்று உருவானது. அந்தத் தொடரில் கேப் டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை உப்பு காகிதத்தை வைத்து சேதப்படுத்தினர்.

இதன் காணோளி வெளியான நிலையில், டேவிட் வார்னர், ஸ்மித் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தனது புத்தகத்தில் டூ பிளசிஸ் குறிப்பிட்டுள்ளார் .

இது தொடர்பான கேள்வி குறித்து பதிலளித்த அவர், “ஆஸ்திரேலியா வீரர்கள் அடாவடித்தனமாக எங்களை மிரட்டும் வகையில் நடந்து கொண்டனர். எங்களை தகாத வார்த்தை பயன்படுத்தி போட்டி முழுவதும் எங்களை திட்டினர். இப்படி நடைபெறும் போது நமக்காக நாம்தான் நின்று போராட வேண்டும். வார்னர் பற்றி நல்லவிதமாக சொல்ல ஒன்று கூட இல்லை. அவர் ஒரு அடாவடிக்காரர். அவரைப் பற்றி எல்லாம் பேசி என் நேரத்தை நான் செலவழிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை