நெதர்லாந்து அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின. இத்தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-1 என தொடர் சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

Advertisement

முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் விக்ரம்ஜித்(27), மேக்ஸ் ஓ டௌட் (38) ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் அடித்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய மூசா அகமது 29 ரன்களும், ஆக்கர்மேன் 37 ரன்களும் அடித்தனர். கேப்டன் எட்வர்ட்ஸ் நன்றாக ஆடி 34 ரன்கள் அடித்தார். இவர்கள் அனைவருக்குமே நல்ல தொடக்கம் கிடைத்தாலும், யாருமே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாததால் நெதர்லாந்து அணியின் ஸ்கோர் உயரவில்லை. இதனால் 50 ஓவரில்  நெதர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் அடித்தது.

Advertisement

இதையடுத்து 232 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் மாதவெர் மற்றும் கிரேக்எர்வின் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் செய்து முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களை குவித்தனர். பின் சிறப்பாக விளையாடி வந்த  மாதவெர் அரைசதம் அடித்தார். ஆனால் 50 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கிரேக் எர்வினும் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். 

இதையடுத்து, கேரி பேலன்ஸும் சீன் வில்லியம்ஸும் இணைந்து 3ஆவது விக்கெட்டுக்கு 106 ரன்களை குவித்தனர். சீன் வில்லியம்ஸ் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த கேரி பேலன்ஸ் 64 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 42ஆவது ஓவரில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தோடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டி மற்றும் தொடர் முழுவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன் வில்லியம்ஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனாக்த் தேர்வு செய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News