WPL 2023: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!

Updated: Wed, Mar 08 2023 23:01 IST
Gujarat Giants beat RCB by 11 runs to win their first game of WPL! (Image Source: Google)

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாம் ஆண்டு சீசன் விறுவிறுப்பு சற்றும் பஞ்சமில்லாமல் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் இன்று நடைபெறற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்நே ராணா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ஸ்நே ரானா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. களமிறங்கிய அந்த அணிக்கு சபினேனி மேகனா மறும் ஷோபியா டங்க்லீ இருவரும் தொடக்க வீராங்கனையாக களமிறங்கினர். இதில், மேகனா (8) ஆரம்பத்திலே வெளியேற அடுத்து வந்த ஹர்லீன் தியோல் நிலைத்து நின்று ரன்கள் குவித்தார். சோபியா டங்கலி மற்றும் ஹர்லீன் தியோல் இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்களை ஓட விட்டனர். ஒவ்வொருவரது ஓவரையும் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினர்.

ஒரு கட்டத்தில் டங்க்லி 28 பந்துகளில் 3 சிக்சர், 11 பவுண்டரி உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆஷ்லே கார்ட்னெர் 19 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். தயாளன் ஹேமலதா 16 ரன்களில் வெளியேறினார். இதே போன்று அன்னாபெல் சதர்லேண்ட் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்னே ராணா 1 ரன் எடுத்து ரன் அவுட்டில் வெளியேறினார். 

ஆனால், ஒரு புறம் நிலைத்து நின்று ஆடிய ஹர்லீன் தியோல் 18 பந்துகளில் 2 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் உள்பட அரைசதம் அடித்து புதிய வரலாற்று சாதனையை படைத்தார். மேலும், தனது முதல் அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். கடைசியாக 45 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரிகள் உள்பட 67 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஸ்மிருதி மந்தனா - சோபி டிவைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த எல்லிஸ் பெர்ரி, சோபி டிவைனுடன் இணைந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த எல்லி பெர்ரி 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரிச்சா கோஷும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் அதிரடியாக விளையாடி வந்த சோபி டிவைன் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்தார். பின் 45 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 66 ரன்களைச் சேர்த்திருந்த சோபி டிவைன் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து வந்த கனிகாவும் 10 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து வந்த பூனம் கெஹ்மரும் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை போராடிய ஹீதர் நைட் 11 பந்துகளில் 30 ரன்களையும், ஷ்ரெயங்கா 11 ரன்களையும் சேர்த்தனர். ஆனாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆர்சிபி அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

குஜராத் ஜெயண்ட்ஸ் தாரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆஷ்லே கார்ட்னர் 3 விக்கெட்டுகளையும், அனபெல் சதர்லேண்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை