சஞ்சு, சஹாலை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்!

Updated: Sat, Jan 25 2025 12:15 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக ரோஹித் சரமா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதசமயம் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால், வருண் சக்ரவர்த்தி மற்றும் கருண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதில் சஞ்சு சாம்சன் மற்றும் சிராஜ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஏனெனில் சஞ்சு தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்தும், சிராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “உண்மையிலேயே, நான் சஞ்சு சாம்சனுக்காக வருத்தப்படுகிறேன். ஏனெனில் அவர் ரன்கள் எடுக்கும் போதெல்லாம், அவர் எப்போதும் முதலில் அணிக்கு தேர்வு செய்யப்படுவதில்லை.

நீங்கள் 15 பேரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பது எனக்குப் புரிகிறது, ஆனால் ஒருநாள் போட்டி வடிவம் அவரது பேட்டிங்கிற்கு ஏற்றது. மேலும் அவரிடம் 55-56 சராசரி உள்ளது, அப்படி இருக்கும் நிலையிலும் அவர் அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக கூட சேர்க்கப்படவில்லை. இப்படியான ஒருவீரரை நீங்கள் அணியில் சேர்க்க விரும்பினால், நீங்கள் அணியில் அதற்கான ஒரு இடத்தை உருவாக்கலாம்.

மேலும் நீங்கள் 4 ஸ்பின்னர்களைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அதில் இரண்டு வீரர்கள் இடது கை ஸ்பின்னர்கள். அப்படி இருக்கையில் நீங்கள் ஒரு வித்தியாசத்திற்காவது ஒரு லெக் ஸ்பின்னரையும் சேர்த்திருக்கலாம். அந்தவகையில் யுஸ்வேந்திர சஹால் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். இந்த அணியில் அவருக்கு இடம் கிடைக்காத அளவிற்கு அவர் என்ன தப்பு செய்தார் என்பது எனக்கு தெரியவில்லை” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து & சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்டிக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா (இங்கிலாந்து தொடரில் மட்டும்).

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை