இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதன் 31 வது போட்டி இன்று இரவு மும்பையில் வைத்து நடைபெற இருக்கிறது இந்தப் போட்டியில் ஐபிஎல் இன் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோத இருக்கிறது .

Advertisement

மூன்று வெற்றிகளுடன் புள்ளிகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது பஞ்சாப் . மும்பை அணியும் அதே மூன்று வெற்றிகளை பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் ஆறாவது இடத்தில் இருக்கிறது . இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது இரண்டு அணிகளுக்குமே புள்ளிகளின் பட்டியலில் முன்னேறி செல்வதற்கு உதவும் .

Advertisement

கடந்த போட்டியில் பெங்களூர் அணியுடன் ஆன தோல்வியுடன் இந்தப் போட்டியை சந்திக்க இருக்கிறது பஞ்சாப் . ஆனால் தொடர்ந்து பெற்ற மூன்று வெற்றிகளுடன் உற்சாகத்தில் இருக்கிறது மும்பை . இதனால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது . மும்பை அணியை பொறுத்தவரை டேட்டிங்கில் இஷான் கிஷான் கேமரூன் கிரீன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர் . 

அதிலும் குறிப்பாக திலக் வர்மா கடந்த சீசனில் இருந்தே தொடர்ச்சியாக நல்ல பெர்ஃபார்மன்ஸ் கடை கொடுத்து வருகிறார் . ஐபிஎல் போட்டி தொடர்களில் 53.50 சராசரி வைத்திருக்கும் திலக் வர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 158.52, இந்த வருட ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்களை எடுத்தவர்களுக்கான பட்டியலில் முதல் 12 இடங்களுக்குள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . 

கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட் பண்டிதர்கள் திலக் வர்மாவை எதிர்கால இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கணித்து வருகின்றனர் . இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திலக் வர்மாவை வெகுவாக பாராட்டி இருக்கிறார் .

இது தொடர்பாக பேசிய அவர், “திலக் வர்மா ஒரு அற்புதமான வீரர் . இந்த ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிய இரண்டாவது அல்லது மூன்றாவது போட்டியிலேயே இவர் இந்திய அணிக்கான எதிர்கால வீரர் என்று நான் கூறியிருந்தேன் . வெகு விரைவிலேயே இந்திய அணிக்குள் இவர் இடம் பெறுவார் . அவரிடம் அதற்கான திறமை மற்றும் பக்குவம் இருக்கிறது . அவர் தேர்வாளர்களின் கதவை தட்டவில்லை உடைத்துக் கொண்டிருக்கிறார். 

Advertisement

அவரிடம் உள்ள சிறப்பம்சமே என்னவென்றால் முதல் 10 பந்துகளிலும் தன்னுடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்து பெரிய ஷாட்களை ஆடுகிறார்.கடந்த போட்டியின் போது ரோஹித் சர்மா பேசியதை நினைவுபடுத்த விரும்புகிறேன் திலக் வர்மா பந்துவீச்சாளர்களை ஆடுவதில்லை. தனக்கு வீசப்படும் பந்துகளை ஆடுகிறார் பந்துகளின் தகுதிக்கேற்ப அவற்றை எதிர்கொண்ட ஆடும் அவரது திறன் நம் எல்லோருடைய கண் முன்னே இருக்கிறது . அதுதான் அவரை மற்றவீரர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது” என்று கூறியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News