IND vs SA: ஐபிஎல்லை வைத்து எதுவும் முடிவுசெய்யக்கூடாது - சுரேஷ் ரெய்னா!

Updated: Mon, Jun 06 2022 20:06 IST
‘How they perform for India will matter’ – Suresh Raina sheds light on the importance of South Afri (Image Source: Google)

இந்தியா வந்துள்ள தென் ஆபிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், ஐபிஎல் 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்ட உம்ரான் மாலிக், தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணிக்கு நீண்ட காலமாக விளையாடமல் இருக்கும் தினேஷ், புதுமுக வீரராக இருக்கும் உம்ரான் மாலிக் ஆகியோர், இந்திய அணிக்காக இன்னமும் தனது பார்மை நிரூபிக்காமல் இருக்கும் நிலையில், இருவருக்கும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என பலர் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள சுரேஷ் ரெய்னா, ஐபிஎல்லை வைத்து இருவரின் பார்மையும் மதிப்பிட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். 

அதில் பேசிய அவர்,‘‘ஐபிஎலில் சிறப்பாக செயல்பட்டவர்கள், தென்னாப்பிரிக்க தொடரில் எப்படி செயல்படப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஐபிஎல் வேறு, இந்திய அணி வேறு. ஐபிஎலில் இருக்கும் சூழல், இந்திய அணிக்காக விளையாடும்போது இருக்காது. மனநிலை மிகவும் முக்கியம்.

டெல்லியில் தற்போது கோடையின் தாக்கம் இருக்கிறது. இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாரு விளையாடுவது முக்கியம். உம்ராக் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இத்தொடரில் எப்படி செயல்படப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கேப்டனாக செயல்பட உள்ள கே.எல்.ராகுல் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இத்தொடரிலும் அசத்துவார் என நம்புகிறேன்’’ எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை