இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் 4ஆவது காலிறுதிப்போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் ஹைதராபாத் - குஜராத் அணிகள் மோதின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 

Advertisement

ஆனால் 4ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 75 ரன்களைச் சேர்த்தார். குஜராத் அணி தரப்பில் கஜா, பியூஷ் சாவ்லா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கைத் துரத்திய குஜராத் அணியால் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது. 

Also Read: T20 World Cup 2021

Advertisement

இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து அந்த அணியால் 128 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் ஹைதராபாத் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் குஜராஜ் அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பைப் பெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News