சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. அந்த வெற்றியில் ஜடேஜா முதல் ஓய்வு பெற்ற ராயுடு வரை அனைவரும் முக்கிய பங்காற்றியதை போலவே இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரானா பந்து வீச்சு துறையில் முக்கிய பங்காற்றினார்.

Advertisement

முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்காவின் ஸ்லிங்கா ஆக்சனை பின்பற்றி அண்டர்-19 உலகக்கோப்பை தொடரில் விளையாடி அனைவரது கவனத்தை ஈர்த்தார். அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ஆரம்பத்தில் நெட் பவுலராக விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் 2022 சீசனில் கடைசிக்கட்ட சில போட்டிகளில் வாய்ப்பு பெற்று அசத்தினார். அதன் காரணமாக இந்த வருடம் 12 போட்டிகளில் வாய்ப்பு பெற்று 19 விக்கெட்டுகளை 8.01 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்த அவர் பெரும்பாலும் டெத் ஓவர்களில் மலிங்காவை போலவே துல்லியமான யார்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். 

Advertisement

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடினால் உலகக்கோப்பை கொண்ட தொடர்களில் பதிரான மேஜிக் செய்வார் என்று தோனி பாராட்டியது இலங்கை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அதனால் இலங்கைக்கு வருங்காலத்திற்கு தேவையான வைரத்தை தோனி பட்டை தீட்டி வருவதாக பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே பாராட்டினார். இந்நிலையில் பெரிய அளவில் அனுபவமில்லாத குழந்தையை போல் இருந்த தமக்கு ஐபிஎல் போன்ற அழுத்தமான டி20 கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதை தோனி கற்றுக் கொடுத்ததாக பதிரானா வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஒரு இளம் வீரருக்கு அவரைப் போன்ற ஒருவர் தன்னம்பிக்கை கொடுப்பது உங்களுடைய கேரியரில் மிகப்பெரிய உத்வேகமாக அமையும். அவரைப் போன்ற ஒருவர் எனக்கு ஆதரவு கொடுத்து என்னால் இந்த அளவில் சாதிக்க முடியும் என்று நம்பினார். எனக்கு மட்டுமல்லாமல் தோனி அனைவருக்குமே தன்னம்பிக்கையை கொடுக்கிறார். சென்னை அணியில் 4 – 5 டாப் வீரர்கள் காயத்தை சந்தித்திருந்த போது அவர் இளம் வீரர்கள் மீது நம்பிக்கை காட்டியது மிகவும் சிறந்ததாகும்.

தோனியிடமிருந்து நான் நிறைய கற்றுள்ளேன். முதலில் அமைதியாக இருப்பது. அதனால் தான் அவர் வெற்றிகரமாக இருக்கிறார். அதே போல 42 வயதிலும் ஃபிட்டான வீரராக இருக்கும் அவர் அனைவருக்கும் உத்வேகத்தை கொடுப்பவராக இருக்கிறார். சென்னை அணியில் நான் இருந்த போது குழந்தையாக இருந்தேன். யாருக்கும் என்னை பற்றி அதிகம் தெரியாது. இருப்பினும் அவர்கள் எனக்கு பயிற்சிகளை கொடுத்து நிறையவற்றை கற்றுக் கொடுத்தனர்.

அதனால் தற்போது எந்த வகையான டி20 கிரிக்கெட்டிலும் என்னுடைய 4 ஓவர்களை வீசி சமமாக எப்படி செயல்பட முடியும் என்பதை நான் கற்றுள்ளேன். மேலும் நான் காயங்களை சந்திக்காமல் இருந்தால் என்னுடைய அணிக்காகவும் நாட்டுக்காகவும் நிறைய வெற்றிகளை சாதிக்க முடியும் என்று தோனி சொன்னார்” என்று தெரிவித்தார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News