நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நாளை இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கி நடக்கிறது. 

Advertisement

இதையொட்டி இந்திய பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். 

Advertisement

இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டி20 போட்டியில் ரிஷப் பந்த் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை .தொடர்ந்து தடுமாறி வருகிறார்.இதனால் பண்ட் மீது பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த நிலையில் ரிஷப் பந்த் இந்திய அணியில் எந்த பேட்டிங் வரிசையில் களம் இறங்க வேண்டும் என்று இந்திய'அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர்,"அடுத்த டி20 உலகக் கோப்பை இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரவுள்ளது. எனவே அங்குள்ள நிலைமைகளை மனதில் வைத்து, ரிஷப் பந்த் முதல் 3 இடங்களுக்குள் பேட் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரது ஐபிஎல் சாதனைகளைப் பார்த்தால், அவரது சிறந்த ஆட்டங்கள் . தொடக்கம் அல்லது அவர் 3ஆவது இடத்தில் அவர் பேட்டிங் செய்த போது, ​​ அவருக்கு கிடைத்துள்ளன. அவருக்கு மேட்ச் வின்னர் ஆக வாய்ப்பளிக்க வேண்டும்.

தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட மாட்டார் என்று நினைக்கிறேன். அதனால் சஞ்சு சாம்சன் போன்றவர்களை நீங்கள் வாய்ப்பு கொடுக்கலாம். ராகுல் திரிபாதி ,தீபக் ஹூடா ஆகியோரை பினிஷர் ரோலுக்கு பயன்படுத்தலாம் . உம்ரான் மாலிக் கண்டிப்பாக விளையாடக்கூடிய ஒரு பந்து வீச்சாளர்” என தெரிவித்துள்ளார் 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News