சமகால கிரிக்கெட்டின் முடி சூடா மன்னாக திகழ்ந்து வந்த விராட் கோலி, கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார். இதனால் மிக கடுமையான விமர்ச்சனங்களையும் விராட் கோலி எதிர்கொண்டு வருகிறார்.

Advertisement

இந்திய அணியின் அசைக்க முடியாக நம்பிக்கையாக திகழ்ந்து வந்த விராட் கோலிக்கு, இனி இந்திய அணியில் இடமே கொடுக்க கூடாது, அது இந்திய அணியை பலவீனப்படுத்தும் என முன்னாள் வீரர்கள் பலர் பகிரங்கமாக பேசி வருகின்றனர். பிசிசிஐயும் விராட் கோலிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்து வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

விண்டீஸ் அணிக்கு எதிரான நடப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் ஓய்வு எடுத்த விராட் கோலி, எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரிலாவது தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் விராட் கோலி மீது அக்கறை உள்ள சிலர் விராட் கோலி தன்னுடைய மோசமான பார்மில் இருந்து மீலுவதற்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் சந்து போர்டே, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் சார் டான் பிராட்மண்ட் செய்த யுக்தியை விராட் கோலி செய்தால் நிச்சயம் மோசமான பார்மிலிருந்து மீண்டுவிடுவார் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சந்து ,“நாங்கள் 1968 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் விளையாட சென்ற போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் சார் டான் பிராட்மண்ட், விராட் கோலி சந்திப்பது போன்று மிக மோசமான பார்மிலிருந்தார். அப்போது அவர் பயிற்சி நேரங்களில் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடுவதற்கு பயிற்சி மேற்கொண்டிருந்தார். 

அதற்குப் பின் அவர் எங்களுக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார். நான், சார் டான் பிராட்மண்ட் செய்த அதே அறிவுரையை தான் விராட் கோலிக்கும் கொடுக்கிறேன், வலைப் பயிற்சி ஒவ்வொரு பந்தயும் அவர் அடித்தாட வேண்டும், ஆனால் நேர்மையாக சொல்லப்போனால் விராட் கோலிக்கு எந்த பயிற்சி இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு உதவியாக இருக்கும் என்பது யாருக்குமே தெரியாது. இதுபோன்ற நெருக்கடி ஒவ்வொரு வீரர்களுக்குமே வரும் அதிலிருந்து மீள்வதற்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News