ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று லக்னோவிலுள்ளா ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டெம்பா பவுமா 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசனும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஐடன் மார்க்ரம் டி காகுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 19ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இது இந்ததொடரில் அவர் விளாசும் இரண்டாவது சதமாகும்.

அதன்பின் 8 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி 109 ரன்களைச் சேர்த்திருந்த குயின்டன் டி காக் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து  அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த ஐடன் மார்க்ரம் 56 ரன்களுக்கும், ஹென்ரிச் கிளாசென் 29 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஜோஷ் ஹசில்வுட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் - மார்கோ ஜான்சென் ஆகியோர் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை ஆஸ்திரேலிய வீரர்கள் தவறவிட்டனர். அதன்பின் 26 ரன்கள் எடுத்திருந்த மார்கோ ஜான்சென் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 17 ரன்களை எடுத்திருந்த டேவிட் மில்லரின் விக்கெட்டையும் மிட்செல் ஸ்டார்க் கைப்பற்றினார். 

இதனால் தென் ஆப்பிரிக்க அண் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News