ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் இன்றைய போட்டிக்குப் பின் நியூசிலாந்து அணியும் தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.

Advertisement

அதன்ப்டி இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில்டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 46.4 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு துவக்க வீரர் குசால் பெரேரா அதிரடியாக 51, மஹீஷ் தீக்ஷனா 38 ரன்கள் எடுத்தார்கள்.மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 

Advertisement

அதை தொடர்ந்து 172 என்ற சுலபமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதை விட இந்த வெற்றியால் 10 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை 99.9% உறுதி செய்து விட்டது.

 

ஏனெனில் நியூசிலாந்தின் வெற்றியால் 5ஆவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் தங்களுடைய கடைசி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 275 ரன்கள் அல்லது 284 பந்துகள் வித்தியாசத்தில் பெற்றால் மட்டுமே நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற அசாத்தியமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News