இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது லீக் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா - பதும் நிஷங்கா இணை களமிறங்கினர். இதில் குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிடததார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான ஆட்டை வெளிப்படுத்தி அணியின் ஸ்கொரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

இதில் அரைசதம் கடந்த பதும் நிஷங்க 51 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மூன்றாவது வீரராக களமிறங்கிய குசால் மெண்டிஸ் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினார். இதில் அபாரமாக விளையாடிய குசால் மெண்டிஸ் 65 பந்துகளில் தனது முதல் உலகக்கோப்பை சதத்தைப் பதிவுசெது அசத்தினார். 

இன்றைய போட்டியில் 77 பந்துகளை சந்தித்த அவர் 14 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 122 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்கா ஒரு ரன்னிலும், அதிரடியாக விளையாட முயன்ற தனஞ்செயா டி சில்வா 25 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதேசமயம் மறுப்பக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெள்ப்படுத்தி வந்த சதீரா சமரவிக்ரமா 82 பந்துகளில் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்ததுடன், உலகக்கோப்பை போட்டியிலும் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் கேப்டன் தஷுன் ஷனகா 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 108 ரன்களைச் சேர்த்த நிலையில் சதீராவும் தனது விக்கெட்டை இழந்தார்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராவுஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News