கோலி-ரோஹித் குறித்து பதிவிட்ட அசாரூதின் - விளக்கம் கேட்ட கவாஸ்கர்!

Updated: Wed, Dec 15 2021 21:51 IST
If Azharuddin Has Inside Information On Kohli-Rohit's Rift, He Should Tell Us: Sunil Gavaskar (Image Source: Google)

கோலி-ரோஹித் சர்மா இடையே மோதல் போக்கு, ஈகோ இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவது சுனில் கவாஸ்கரை பொறுத்தவரை நம்பகத்தன்மை இல்லாததே. கோலி தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரிலிருந்து விலகியது தொடர்பாக முன்னாள் கேப்டன் அசாருதீன், இந்த விலகல் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதை அம்பலப்படுத்துகிறது என்று கூறியதை கவாஸ்கர் ஏற்கவில்லை.

த்ரோ டவுன் பயிற்சியில் ரோஹித் சர்மாவின் கையில் அடிப்பட்டதோடு, ஹாம்ஸ்ட்ரிங் காயமும் இருப்பதால் டெஸ்ட் தொடரிலிர்ந்து ரோஹித் ஷர்மா விலகினார், உடனேயே மகள் வாமிகாவின் முதல் பிறந்தநாள் தொடர்பாக கோலி தானும் ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக அசாருதீன் நேற்று செய்த ட்வீட்டில், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாததை கோலி தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் விளையாடமுடியாததை ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். கோலி ஓய்வுஎடுப்பதில் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால், அதற்கான கால நேரம்தான் சரியில்லை. இருவருக்கும் இடையிலான பிளவு குறித்த ஊகங்களை இந்த செயல் உறுதிசெய்கிறது. இருவருமே டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டை விட்டுக்கொடுக்காதவர்கள்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து சுனில் கவாஸ்கர், “கோலிக்கும் ரோகித்துக்கும் இடையே உரசல் இருக்கிறதா என்பதுதான் என் கேள்வி. இரண்டு வீரர்களும் இது தொடர்பாக வெளிப்படையாக மனம் திறந்து பேசினாலே தவிர நாம் இதைப்பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.

ஆம் அசாருதீன் ஏதோ சொல்கிறார், உண்மையாக அவருக்கு ஏதாவது உள் தகவல் கிடைத்திருந்தால் அதை வெளிப்படையாக போட்டு உடைக்கட்டுமே. என்ன நடந்தது என்று நமக்கு தெரிவிக்கலாமே.

அதுவரையில் நான் சந்தேகத்தின் சாதக பலனை கோலி, ரோஹித் சர்மா இருவர் சார்பாகவுமே வழங்குவேன். இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்குப் பிரமாதமாக சேவையாற்றியவர்கள்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை