ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட விரும்புகிறேன் - ரிங்கு சிங் ஓபன் டாக்!

Updated: Mon, Aug 19 2024 13:15 IST
Image Source: Google

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாக அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா எலம் நடைபெறவுள்ளது, இதில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 2025 சீசன் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட்  அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிங்கு சிங் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி, எதிர்வரும் வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தன்னை தக்கவைக்கவில்லை என்றால், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியில் சேர விரும்புவதாக அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். 

கடந்த 2018ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஆரம்ப விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிங்கு சிங், 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் யஷ் தயாள் பந்துகளில் தொடர்ந்து ஐந்து பந்துகளில் 5 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் காரணமாக கடந்தாண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக அறிமுகமானர்.

அதன்பின் கடந்தாண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணியில் அறிமுகமானார். தனது அறிமுக போட்டி முதல் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியின் அடுத்த ஃபினீஷர் எனும் பெயரையும் பெற்ற ரிங்கு சிங், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் போதிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தற்சமயம் ஃபார்மை இழந்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. 

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தான் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர், “எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது என்னை விடுவித்தால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஏனெனில் அங்கு விராட் கோலி இருப்பதால் ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரிங்கு சிங்கின் இந்த கருத்தானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை