ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய கைல் மேயர்ஸ் 19 ரன்களுக்கு விக்கெட்ட இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ஆண்டிரிஸ் கஸும் 17 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய மைக்கேல் பெப்பர் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில், அவருடன் இணைந்து விளையாடி வந்த ஜோ கிளார்க் 24 ரன்களுக்கும், அலிஷன் ஷராஃபு 5 ரன்களுக்கும், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன் ஆகியோர் சொற்ப ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 57 ரன்களை எடுத்த கையோடு மைக்கேல் பெப்பரும் ஆட்டமிழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஜேசன் ஹோல்டர் 16 ரன்களையும், டேவிட் வில்லி 11 ரன்களையும் சேர்க்க அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அயான் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆடம் லித் 2 ரன்களிலும், கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 14 ரன்னிலும், ஜோர்டன் காக்ஸ் 10 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் நிதானமாக விளையாடி வந்த இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் தலா 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஷிம்ரான் ஹெட்மையர் 20 ரன்களையும், மார்க் அதிர் 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி வெற்றிக்கு காரணமாக இருந்த மைக்கேல் பெப்பர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News