அனைத்து போட்டிகளிலும் பும்ரா தன்னை நிரூபித்துள்ளார் - கேஎல் ராகுல்!

Updated: Mon, Aug 09 2021 11:03 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கியது. 

இப்போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 157 ரன்கள் இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக ஐந்தாம் நாள் ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டு, போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இருப்பினும் இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்தார். 

பும்ரா குறித்து பேசிய கேஎல் ராகுல், “இப்போட்டியின் மூலம் பும்ரா மீண்டும் தனது ஃபார்மிற்கு திரும்பியுள்ளார் என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. எல்லா நேரங்களிலும், எல்லா போட்டிகளிலும், எல்லா இடங்களிலும் பும்ரா தான் யார் என்பதை நிரூபித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்பிரித் பும்ரா 92 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 6 முறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை