இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. 

Advertisement

ராஞ்சியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 278/7 ரன்களை குவிக்க, இந்திய அணி 45.5 ஓவர்களிலேயே 282/3 ரன்களை குவித்து வெற்றி கண்டது.

Advertisement

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஸ்ரேயாஸ் ஐயர் - இஷான் கிஷான் ஜோடி தான். 48/2 ரன்கள் என தடுமாறிய போது ஜோடி சேர்ந்த இவர்கள் 3வது விக்கெட்டிற்கு 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 113 ரன்கள் விளாசினார். ஆனால் இஷான் கிஷானால் தான் துரதிஷ்டவசமாக சதமடிக்க முடியவில்லை.

அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 84 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களை விளாசினார். சதத்திற்கு அருகில் நெருங்கிய போது எதிர்பாரதவிதமாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். எனினும் வாய்ப்பே கிடைக்காமல் இருந்து வந்த அவர் கம்பேக் கொடுத்ததற்கு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சதம் தவறியது குறித்து இஷான் கிஷான் பேசியுள்ளார். அதில், “அணியின் வெற்றிக்கு பங்களிப்பு தந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இது எனது சொந்த ஊர் மைதானம் என்பதால் நான் ஃபீல்டிங் செய்யும் போதே, சதமடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரினர். அதற்காக மிகவும் போராடினேன். எனினும் தவறிவிட்டது. இதற்காக கவலை இல்லை, அடுத்த போட்டியில் இதை விட சிறப்பாக விளையாடலாம்.

ராஞ்சியில் விளையாடுவது சாதாரணம் அல்ல. இங்கு புதிய பேட்டர்கள் தாக்குப்பிடிப்பது கடினமாகும். ஒரு சில பந்துகள் மிக மெதுவாக வருகின்றன, ஒரு சில பந்துகள் மிக வேகமாக வருவதால் கணிக்க முடியவில்லை. இதனால் முன்கூட்டியே ஷாட்களை தீர்மானித்து வைத்திருக்க கூடாது என முடிவெடுத்தேன். 

Advertisement

பந்து உடலுக்கு அருகில் வந்த பின்னர் தான் பேட்டை நகர்த்த வேண்டும் என்றே முடிவெடுத்தேன். அது கைக்கொடுத்துள்ளது. வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் ஆட ஆவலுடன் உள்ளேன்” என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News