இந்திய அணி சமீபத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது. இத்தொடர் முடிந்த உடன் நாடு திரும்பியுள்ள இந்திய அணி, அடுத்து இலங்கைக்கு எதிரான முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடும்.

Advertisement

முதலில் தொடங்கும் டி20 தொடர் ஜனவரி 3, 5, 7 ஆகிய தேதிகளில் மும்பை, புனே, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் நடைபெறும். இப்போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறும். இந்த டி20 தொடரில் இந்திய இளம் டி20 அணிதான் விளையாட உள்ளது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி, புவனேஷ்வர் குமார் போன்றவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், ஹார்திக் பாண்டியா டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி கொடுத்து, தனது கேப்டன்ஸியை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்.

Advertisement

இதனால், இலங்கைக்கு எதிரான இந்த டி20 தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இலங்கை அணி ஆசியக் கோப்பையில் இந்தியா வீழ்த்தி கெத்து காட்டியிருந்தார்கள். இதனால், இதற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். இந்நிலையில், இந்த இலங்கை தொடருக்கு முன், கேப்டன் ஹார்திக் பாண்டியா பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது, இந்த வருடத்தில் உங்களது குறிகோள் என்ன? என நிரூபர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த ஹார்திக், “இந்தாண்டில், இந்திய அணிக்காக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுகொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் எனது குறிகோளாக இருக்கும். அதற்காக கடுமையாக பயிற்சிகளை மேற்கொள்வேன்” எனக் கூறினார்.

அடுத்து, நீங்கள் எப்போது டெஸ்ட் அணிக்கு திரும்புவீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, “தற்போது எனது கவனம் அனைத்தும் டி20, ஒருநாள் கிரிக்கெட் மீதுதான் இருக்கிறது. இதில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். இதில் சிறப்பாக செயல்பட்ட திருப்தி கிடைத்தால், அடுத்து டெஸ்ட் அணியில் இடம்பெற முயற்சி செய்வேன்” என ஹார்திக் தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி எப்படி தயாராகும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஹார்திக், “கடந்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன், இந்திய அணி அனைத்து வீரர்களும் வாய்ப்பு கொடுத்தது. மேலும், இருதரப்பு தொடர்களிலும் அபாரமாக செயல்பட்டு அசத்தினோம். ஆனால், டி20 உலகக் கோப்பையில் வேறு மாதிரியாக விளையாடினோம். அதற்கு காரணம், காயங்கள்தான். சில வீரர்கள் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இம்முறை காயத்தால் யாரும் விலகவில்லை என்றாலே போதும். புதிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை” எனக் கூறினார்.

Advertisement

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஹார்திக், “முடிந்தவரை அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அது நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News