இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களைச் சேர்த்தார். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி 5 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - வில் யங் இணை அபாரமான தொடக்கத்தை வழங்கினர். 

இதில் அதிரடியாக செயல்பட்ட வில் யங் அரைசதம் கடக்க, அவரைத் தொடர்ந்து டாம் லேதமும் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

இதனால் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் வில் யங்75 ரன்களுடனும், டாம் லேதம் 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News