IND vs SL: சைலண்டாக சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!

Updated: Sat, Feb 26 2022 21:51 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என இந்திய அணி  முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்யது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 183 ரன்களை குவித்து. 

இதில் அதிகபட்சமாக பதும் நிஷங்கா 75 ரன்களையும், தசுன் ஷனகா 47 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இப்போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சைலண்டாக ஒரு சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். அதவாது இப்போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, தினஷ் சண்டிமலின் கேட்சைப் பிடித்தார். 

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 50ஆவது கேட்சைப் பிடித்தார் ரோஹித் சர்மா. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஃபீல்டராக 50 கேட்சுகளைப் பிடித்த முதல் வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.

 

அவருக்கு அடுத்ததாக இப்பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 43 கேட்சுகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை