இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 6ஆம் தேதி சில்ஹட்டில் தொடங்கியது. இந்திய ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக செளராஷ்டிர முன்னாள் வீரர் ஷிதான்சு கொடாக்கும் டிராய் கூலி, வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் டி. திலீப்,ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

Advertisement

இப்போட்டியில் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரின் அபாரமான பந்துவீச்சில் வங்கதேச பேட்டர்கள் தடுமாறினார்கள். ஷஹாதத் ஹுசைன், ஜேக்கர் அலி மட்டும் நன்கு விளையாடி முறையே 80, 62 ரன்கள் எடுத்தார்கள். 

Advertisement

இதனால் வங்கதேச ஏ அணி, 80.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்காலைச் சேர்ந்த 29 வயது முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

அதன்பின் இந்திய ஏ அணி, 2ஆவது நாள் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 144, ஜெயந்த் யாதவ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இதையடுத்து நேற்று நடைபெற்ற மூன்றாம் ஆட்டத்தில் , அபிமன்யு ஈஸ்வரன், 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இந்திய ஏ அணியின் கீழ்நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்டர்கள் அபாரமாக விளையாடி இந்திய அணி 550 ரன்களைத் தாண்ட உதவினார்கள். ஜெயந்த் யாதவ் 83, செளரப் குமார் 55, நவ்தீப் சைனி 50, முகேஷ் குமார் 23 ரன்கள் எடுத்தார்கள். இதன்மூலம் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 147.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச ஏ அணியில் சத்மான் இஸ்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சத்மான் இஸ்லாமும் 93 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

Advertisement

இதனால் வங்கதேச ஏ அணி 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சௌரப் குமார் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News