ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

Advertisement

இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது. 

Advertisement

இந்நிலையில் தான் இத்தொடர் கம்பேக் கொடுக்கும் முயற்சியாக முதல் போட்டியிலேயே அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய அணி சொந்த மண்ணை விட வெளிநாட்டில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவிப்பதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளியது என்பது போல் கூறியுள்ளது ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது. 

இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “ஆஸ்திரேலிய அணி கிட்டத்திட்ட 300 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை நம்ப முடியவில்லை. இது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கும். இப்போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது சரியான முடிவா? என்று பலரும் என்னிடம் கேட்டனர். என்னைப் பொறுத்தவரை டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது என்பது மிகவும் சரியான ஒரு முடிவாக நான் பார்க்கிரேன்.

ஏனெனில் இதற்கு முன்பு பெர்த்தில் நடந்த 4 டெஸ்டுகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. அதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதையே நிச்சயம் விரும்பும். மேலும் மைதானத்தின் புள்ளி விவரங்களுக்கு எதிராக இந்திய அணி செல்ல விரும்பவில்லை. அதற்கேற்றவாரே முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்னில் சுருண்டாலும், அவர்களின் பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளத்தில் பந்து வீச வாய்ப்பு கிடைத்தது.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இந்த வெற்றிக்கு அவர்களை பாராட்ட வேண்டும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த தொடரை இந்திய அணி வெற்றியோடு தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தற்போது இந்தியா சொந்த மண்ணைவிட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது. அதை அவர்கள் பெர்த் டெஸ்டில் நிரூபித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News