இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இப்போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக நிதீஷ் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோருக்கு பதிலாக ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 ரன்களில் பென் டக்கெட்டும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி புரூக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற ஹாரி ப்ரூக் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 13 ரன்னிலும், ஜேமி ஓவர்டன் 5 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஜேமி ஸ்மித் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அபாரமாக விளையாடி வந்த பிரைடன் கார்ஸ் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இறுதியில் ஜோடி சேர்ந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஆதில் ரஷித் இருவரும் இணைந்து 20 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, இங்கிலாந்து அணியும் 150 ரன்களைக் கடந்தது. 

அதன்பின் ஆதில் ரஷித் 10 ரன்னில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் 12 ரன்களையும், மார்க் வுட் 5 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News