இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார். 

Advertisement

அதன்படி முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 30.5 ஓவர்களில் 192 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Advertisement

தொடக்க வீரர்களான ஷிகார் தவான் 81 ரன்களும், சுப்மன் கில் 82 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி பவர்பிளே ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய தீபக் சாஹர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே ஜூலை மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது, இன்றைய ஆட்டத்திலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரே ஆண்டில் இரண்டு முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக சாதனை நிகழ்த்தியுள்ளது.

அதோடு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி பெரும் 13ஆவது தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. 2013ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 12 வெற்றிகளை பெற்றிருந்தது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெற்ற வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 13 போட்டிகளை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அதேபோன்று 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற வெற்றியின் வரிசையில் அதிகபட்ச சேசிங்காக 197 ரன்கள் உள்ளது. அதனைத்தொடர்ந்து அதற்கு அடுத்தபடியாக இந்த 192 ரன்கள் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News