ஐபிஎல் 2021: நியூசிலாந்து வீரர்கள் பங்கேற்பது உறுதி!

Updated: Fri, Jun 25 2021 12:22 IST
ipl-2021-phase-2-new-zealand-players-confirm-their-availability (Image Source: Google)

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து வெற்றி பெற்றது. 

மேலும் நியூஸிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி நடத்தும் ஒவ்வொரு தொடரிலும் அரையிறுதி, இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியடைந்து பழக்கப்பட்ட நியூஸிலாந்து அணி தற்போது சாம்பியன் பட்டத்தை வென்றதே இதற்கு காரணம். 

இந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களில் நியூசிலாந்தைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பார்கள் என மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. 

இங்கிலாந்து, வங்கதேச, ஆஸ்திரேலிய வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் நிலவும் நிலையில், நியூசிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

இதுகுறித்து பேசிய ஐபிஎல் அணியின் உரிமையாளர்களில் ஒருவர், ‘நாங்கள் இப்போது மிகவும் நிம்மதியாக இருக்கிறோம். வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் கலந்து கொள்வது குறித்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் நியூஸிலாந்து வீரர்கள் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை