ஐபிஎல் 2022: மயங்க், தவான் அரைசதம்; மும்பைக்கு 199 இலக்கு!

Updated: Wed, Apr 13 2022 21:22 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்தி வருகின்றன. 

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் - ஷிகர் தவான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். அதிலும் நடப்பு சீசனில் இதுவரை பெரிதாக சோபிக்காத மயங்க் அகர்வால் இன்றைய போட்டியின் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடினார்.

அதன்மூலம் இன்றைய போட்டியில் அரைசதம் கடந்தும் அசத்தினார். அதன்பின் 52 ரன்கள் சேர்த்திருந்த மயங்க் அகர்வால், முருகன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் 12, லியாம் லிவிங்ஸ்டோன் 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கிடையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் தனது 45ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் 70 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அவருடன் இணைந்த ஷாருக் கானும் பவுண்டரிகளை விளாசினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்மா 30 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை